sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுற்றுலா வேன் மோதி முதியவர் பலி

/

சுற்றுலா வேன் மோதி முதியவர் பலி

சுற்றுலா வேன் மோதி முதியவர் பலி

சுற்றுலா வேன் மோதி முதியவர் பலி


ADDED : அக் 05, 2025 01:15 AM

Google News

ADDED : அக் 05, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு சென்னையில் உள்ள, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும், 14 பேர், நேற்று முன்தினம் ஏற்காடுக்கு சுற்றுலா வந்தனர். சரவணன் என்பவருக்கு சொந்தமான வேனை, வேலுார் மாவட்டம் வளத்துாரை சேர்ந்த தமிழ்மாறன், 59, ஓட்டினார்.

அவர்கள் ஏற்காட்டை சுற்றிப்பார்த்துவிட்டு, நேற்று மதியம், 2:00 மணிக்கு, ஏற்காடு, குப்பனுார் மலைப்பாதையில் சென்னைக்கு புறப்பட்டனர். 2:30க்கு, வாழவந்தி அடுத்த ஆத்துப்பாலம் அருகே, இறக்கமான சாலையில் சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த வேன், வேகமாக சென்று, முன்புறம், 'ஆக்டிவா' மொபட்டில் சென்ற, வாழவந்தியை சேர்ந்த ராஜமாணிக்கம், 55, மீது மோதியது.

இதில் ராஜமாணிக்கம், 50 மீ., இழுத்துச்செல்லப்பட்டு, துாக்கி வீசப்பட்டார். மக்கள், அவரை மீட்டு, வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிரிழந்தார். ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us