/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துக்கம் விசாரிக்க சென்றபோது மொபட் மோதி மூதாட்டி பலி
/
துக்கம் விசாரிக்க சென்றபோது மொபட் மோதி மூதாட்டி பலி
துக்கம் விசாரிக்க சென்றபோது மொபட் மோதி மூதாட்டி பலி
துக்கம் விசாரிக்க சென்றபோது மொபட் மோதி மூதாட்டி பலி
ADDED : ஜூலை 16, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, தலைவாசல், சாத்தப்பாடி, வடக்குகாட்டுக்கொட்டாயை சேர்ந்த நல்லமுத்து மனைவி பட்டத்தாள், 73. நேற்று இரவு, 7:40 மணிக்கு சாத்தப்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் துக்கம் விசாரிக்க, சாத்தப்பாடி - சார்வாய் சாலை பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் மீது, 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்.,' மொபட் மோதியது. இதில் பட்டத்தாள் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார், மொபட் ஓட்டி வந்த, புனல்வாசலை சேர்ந்த முருகேசன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.