/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
ADDED : டிச 04, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், டிச. 4-
திருப்பத்துார் மாவட்டம் பேரிவாடியை சேர்ந்தவர் கலீம், 56. எலக்ட்ரீஷியனான இவர், நேற்று முன்தினம் மாலை சேலம் வந்தார். இங்கு புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திடலில், சிறுநீர் கழிக்க சென்றபோது, அங்கிருந்த மின் ஒயரை மிதித்துள்ளார்.
அப்போது மின்சாரம் பாய்ந்து துாக்கிவீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கலீம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.