/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஞ்சராகி நின்ற லாரி மீது பைக் மோதி ஊழியர் பலி
/
பஞ்சராகி நின்ற லாரி மீது பைக் மோதி ஊழியர் பலி
ADDED : டிச 26, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், டிச. 26-
கடலுார் மாவட்டம் குறிஞ்சிபாடி, கிருஷ்ண
குப்பத்தை சேர்ந்த, வேளாங்கண்ணி மகன் ஆல்வின் லியோ, 23. டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்த இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, 'யமஹா' பைக்கில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியே, ஆத்துார் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தார். ஆத்துார், சந்தனகிரி பிரிவு சாலையில் சென்றபோது, டயர் பஞ்சராகி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில் ஆல்வின்லியோ உயிரிழந்தார்.

