/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓம்கார மலை வேல்முருகன் கோவிலில் இ.பி.எஸ்., சுவாமி தரிசனம்
/
ஓம்கார மலை வேல்முருகன் கோவிலில் இ.பி.எஸ்., சுவாமி தரிசனம்
ஓம்கார மலை வேல்முருகன் கோவிலில் இ.பி.எஸ்., சுவாமி தரிசனம்
ஓம்கார மலை வேல்முருகன் கோவிலில் இ.பி.எஸ்., சுவாமி தரிசனம்
ADDED : பிப் 18, 2025 07:20 AM
ஓமலுார்: கும்பாபிேஷகம் நடைபெற்ற, ஓம்கார மலையில் உள்ள வேல்-முருகன் கோவிலில், இ.பி.எஸ்., சுவாமி தரிசனம் செய்தார்.
சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே திண்டமங்கலத்தில் உள்ள ஓம்கார மலையில் எழுந்தருளியுள்ள வேல்முருகன் மற்றும் ரங்க-நாதர் ஆலயங்களின் கும்பாபிேஷகம் நேற்று முன்தினம் நடை-பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். நேற்று மாலை, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவி-லுக்கு வந்த இ.பி.எஸ்.,க்கு, ஓமலுார் எம்.எல்.ஏ.,மணி, ஒப்பந்த-தாரர் பரமசிவம், ஜெ.,பேரவை மாநில துணை செயலர் விக்னேஷ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
வேல்முருகன் கோவிலில், இ.பி.எஸ்.,க்கு பரிவட்டம் கட்டப்-பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின் கோவில் வளாகத்தில் நடந்த வள்ளி கும்மியாட்டத்தை இ.பி.எஸ்., பார்வையிட்டார். மாநிலங்களவை உறுப்பினர் சந்திர-சேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல், ஓமலுார் ஒன்றிய செயலர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார், பாலிக்கடை பெரிய-சாமி, உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.