/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று ரத்த தான முகாம்; துவக்கி வைக்கிறார் இ.பி.எஸ்.,
/
இன்று ரத்த தான முகாம்; துவக்கி வைக்கிறார் இ.பி.எஸ்.,
இன்று ரத்த தான முகாம்; துவக்கி வைக்கிறார் இ.பி.எஸ்.,
இன்று ரத்த தான முகாம்; துவக்கி வைக்கிறார் இ.பி.எஸ்.,
ADDED : பிப் 28, 2025 07:00 AM
வாழப்பாடி: அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர் அருண்குமார் அறிக்கை: மறைந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி சார்பில், ஏற்காடு சட்டசபை தொகுதி, அயோத்தியாப்பட்டணம், வாசு திருமண மஹாலில், ரத்ததான முகாம், பிப்., 28(இன்று) காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். முகாமை, அ.தி.மு க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., தொடங்கி வைக்கிறார். அ.தி.மு.க.,வினர் ஏராளமானோர், ரத்ததானம் வழங்குகின்றனர். அதனால் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.