sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அ.தி.மு.க., நிர்வாகி உடலுக்கு இ.பி.எஸ்., அஞ்சலி

/

அ.தி.மு.க., நிர்வாகி உடலுக்கு இ.பி.எஸ்., அஞ்சலி

அ.தி.மு.க., நிர்வாகி உடலுக்கு இ.பி.எஸ்., அஞ்சலி

அ.தி.மு.க., நிர்வாகி உடலுக்கு இ.பி.எஸ்., அஞ்சலி


ADDED : ஜூலை 05, 2024 01:05 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில், அ.தி.மு.க., நிர்வாகி சண்முகம் படுகொலை செய்யப்-பட்டார்.

அவரது உடல், சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடலை பெற்றுக் கொள்ள மறுத்ததையடுத்து, தி.மு.க, கவுன்சிலரின் கணவர் சதீஷ்குமார் உள்பட, ௧௦ பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவரது உடலை பெற்றுக்கொள்ள, உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் அக்கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்., மருத்துவம-னைக்கு வந்து, சண்முகம் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அவரது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.தொடர்ந்து இ.பி.எஸ்., கூறியதாவது: சண்முகம் கொலையில், தி.மு.க., கவுன்சிலர் தனலட்சுமி, கணவர் சதீஷ்குமார் ஈடுபட்டுள்-ளதாக தகவல் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட பலரும் கைது செய்-யப்பட்டுள்ளனர். கட்சிக்கு உழைத்த தொண்டனை கொலை செய்து, அவர் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளனர். அப்-பகுதியில் போதை பொருட்கள், லாட்டரி சீட்டு விற்பதாக, புகார் செய்த காரணத்துக்கு கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தினமும் கொலை நடந்து வருகிறது. சட்டம் -- ஒழுங்கு சீர்கெட்-டுள்ளது என்பதை தொடர்ந்து கூறி வருகிறேன். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து, சட்டப்-படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம், எம்.எல்.ஏ., பாலசுப்-ர மணியன், முன்னாள் எம்.பி., பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வா-கிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us