/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் மீது சில்லரை காசுகளை வீசியதால் பரபரப்பு
/
பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் மீது சில்லரை காசுகளை வீசியதால் பரபரப்பு
பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் மீது சில்லரை காசுகளை வீசியதால் பரபரப்பு
பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் மீது சில்லரை காசுகளை வீசியதால் பரபரப்பு
ADDED : ஏப் 01, 2024 03:25 AM
பள்ளிப்பாளையம்: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது, வாலிபர் ஒருவர் சில்லரை காசுகளை வீசியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு லோக்சபா தொகுதிக்குட்பட்ட, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், கடந்த, 29 மாலை, 5:00 மணிக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி, அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து, வேனில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அக்கட்சியை சேர்ந்த, 40 வயதுடைய தொண்டர் ஒருவரும், பிரசார வேனின் பக்கவாட்டில் தொங்கியபடி கோஷமிட்டபடியே சென்றார். அப்போது, ஆர்வம் மிகுதியால், அந்த நபர் தன் சட்டை பையில் வைத்திருந்த சில்லரை காசுகளை அள்ளி, முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது வீசி, 'அண்ணன் தங்கமணி வாழ்க...' என, முழக்கமிட்டார்.
இதை சற்றும் எதிர்பாராத தங்கமணி சுதாரித்து, அந்த தொண்டரை பார்த்து, 'இப்படியெல்லாம் செய்யக்கூடாது' என அறிவுரை கூறினார். இதையடுத்து அக்கட்சியினர் அந்த நபரை அப்புறப்படுத்தினர். இதனால் பிரசாரத்தில் சிறிது நேரம் பரபரப்பு
ஏற்பட்டது.

