/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலி ஆவணம்: லாரி ஓனர் மீது வழக்குப்பதிவு
/
போலி ஆவணம்: லாரி ஓனர் மீது வழக்குப்பதிவு
ADDED : அக் 16, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜலகண்டாபுரம், இடைப்பாடி, கோரணம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது லாரி, ஜலகண்டாபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், 2022ல் குற்ற வழக்கில் ஆஜராகி, நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், அவரது வாகனத்துக்கு காப்பீடு ஆவணங்களை போலியாக தயாரித்து, மோட்டார் வாகன விபத்து நிவாரண ஆணையத்தில் வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின், சீனியர் மேலாளர் ராஜேஸ் நேற்று அளித்த புகார்படி, ஏமாற்றுதல், ஆவண மோசடி உள்பட, 4 பிரிவுகளில், நாகராஜ் மீது, ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து
விசாரிக்கின்றனர்.