ADDED : மே 20, 2025 01:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்; சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே, லத்துவாடியை சேர்ந்தவர் முருகன், 50; கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி, 44. இவர்களுக்கு அரவிந்தன், 25, என்ற மகனும், அபிராமி, 23, என்ற மகளும் உள்ளனர். மே 12ல், தம்பதி இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது.
மனமுடைந்த தம்பதி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தனர். இருவரும் மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழ்ச்செல்வி நேற்று முன்தினமும், முருகன் நேற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வீரகனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.