sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரசாயன கழிவுடன் திருமணிமுத்தாறு விவசாயிகள் அவதி

/

ரசாயன கழிவுடன் திருமணிமுத்தாறு விவசாயிகள் அவதி

ரசாயன கழிவுடன் திருமணிமுத்தாறு விவசாயிகள் அவதி

ரசாயன கழிவுடன் திருமணிமுத்தாறு விவசாயிகள் அவதி


ADDED : நவ 12, 2024 11:56 PM

Google News

ADDED : நவ 12, 2024 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார் ; சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் மதியம்பட்டி வழியாக சென்று, பரமத்தி வேலுார் காவிரி ஆற்றில் கலக்கிறது.

இந்த திருமணிமுத்தாற்றில், சேலம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், திருமணிமுத்தாற்றை ஒட்டியுள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் கலக்கின்றன.

இதனால், மதியம்பட்டி வழியாக செல்லும் திருமணிமுத்தாற்றில், வெண்மை நிற நுரையுடன் தண்ணீர் பாய்கிறது. ரசாயன கழிவுடன் கூடிய இந்த நீரை, விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, மதியம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

திருமணிமுத்தாற்றில், தற்போது பெய்த கனமழையால் ஆற்றில் நிறைய தண்ணீர் உள்ளது. இருப்பினும், ரசாயன கழிவுகள் கலந்து நுரையுடன் ஓடுகிறது.

இந்த நீரில் இருந்து ஒரு துளி கூட எங்களால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us