sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

1,400 ஏக்கர் நிலத்தை திரும்ப வழங்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

/

1,400 ஏக்கர் நிலத்தை திரும்ப வழங்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

1,400 ஏக்கர் நிலத்தை திரும்ப வழங்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

1,400 ஏக்கர் நிலத்தை திரும்ப வழங்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்


ADDED : ஏப் 24, 2025 02:08 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி:கையகப்படுத்தப்பட்ட, 1,400 ஏக்கர் நிலத்தை திரும்ப விவசாயிகளுக்கே வழங்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

அகில இந்திய விவசாயிகள் மகா சபை சார்பில், சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, குரால்நத்தம், கட்டபுளியமரம் பஸ் ஸ்டாப்பில், உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய குழுவின் ஜீவா தலைமை வகித்தார்.

அதில், அத்திப்பட்டி, சூரியூர் கிராமங்களில் விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட, 1,400 ஏக்கர் நிலத்தை திரும்ப விவசாயிகளுக்கே வழங்க வலியுறுத்தினர். ஏ.ஐ.கே.எம்., மாநில பொதுச்செயலர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர் அன்பு, ஒன்றிய தலைவர் மாணிக்கம் உள்ளிட்டோர் பேசினர். சி.பி.ஐ.எம்.எல்., மாவட்ட நிலைக்குழு மோகனசுந்தரம், மாவட்ட செயலர் வேல்முருகன், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். வருவாய்த்துறை, போலீசார் பேச்சு நடத்தி, மதியம், 2:30 மணிக்கு போராட்டத்தை முடித்து வைத்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சுதந்திரத்துக்கு முன், முள் காடு, வனங்களை திருத்தி, கிணறு தோண்டி, நெடுங்காலமாக விவசாயம் செய்து வந்தோம். 2004ல் பனமரத்துப்பட்டி ஏரி ஆக்கிரமிப்பை அகற்றியபோது, நீர்பரப்பு பகுதிக்கு தொடர்பே இல்லாத எங்கள் நிலங்கள் பறிக்கப்பட்டன. அத்திப்பட்டி, சூரியூர் விவசாய நிலங்கள், வருவாய், வனம், மாநகராட்சி ஆவணங்களில் விடுபட்டுள்ளன. தற்போது அரசு புறம்போக்கு நிலமாக முள் காடாக உள்ளது. நிலத்தை திரும்ப கேட்டு வருவாய்த்துறையிடம் தனித்தனி கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. கோரிக்கையை அரசின் கவனத்துக்கு தெரியப்படுத்தவே உண்ணாவிரதம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வருவாய்த்துறையினர் கூறுகையில், 'விவசாயிகள் அளித்த, 359 மனுக்கள், தாசில்தார் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு உரிய பதில் அளிக்கப்படும்' என்றனர்.

*******************






      Dinamalar
      Follow us