sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மல்லுக்கட்டும் தந்தை; மகன் தீக்குளிக்க முயற்சி

/

மல்லுக்கட்டும் தந்தை; மகன் தீக்குளிக்க முயற்சி

மல்லுக்கட்டும் தந்தை; மகன் தீக்குளிக்க முயற்சி

மல்லுக்கட்டும் தந்தை; மகன் தீக்குளிக்க முயற்சி


ADDED : ஜூலை 02, 2024 07:21 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம், தீவட்டிப்பட்டி தும்பிப்பாடி காட்டு வளவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 32. இவர், தன் மனைவி மைதிலி, 23, மகள் மவுசிலா, 2, ஆகியோருடன் நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார். அப்போது, மறைத்து வைத்திருந்த மண்-ணெண்ணையை, பாலகிருஷ்ணன் தன்மீது ஊற்-றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து மீட்டு, முதலுதவி அளித்தனர்.

விசாரணையில் அவர் கூறியதாவது: என்னுடைய கிராமத்தில் குடும்பத்துக்கு பாத்தி-யப்பட்டு, 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், எனக்-கான பாகப்பிரிவினை கேட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனது தந்தை ஏழு-மலை, குடும்பத்தாருக்கு தெரியாமல், சிலரின் துாண்டுதல் பேரில் நிலத்தை விற்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நிலத்தை சுவா-தீனம் எடுக்க வந்த ரவிச்சந்திரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தேன். போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதால், தற்கொலைக்கு முயன்று, கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன். இவ்வாறு கூறினார்.இதையடுத்து, பாலகிருஷ்ணனிடம் சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us