sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உணவு பொருளை பயிரிடவே அச்சம்; மலை அடிவார விவசாயிகள் விரக்தி

/

உணவு பொருளை பயிரிடவே அச்சம்; மலை அடிவார விவசாயிகள் விரக்தி

உணவு பொருளை பயிரிடவே அச்சம்; மலை அடிவார விவசாயிகள் விரக்தி

உணவு பொருளை பயிரிடவே அச்சம்; மலை அடிவார விவசாயிகள் விரக்தி


ADDED : ஜன 20, 2025 07:15 AM

Google News

ADDED : ஜன 20, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் தும்பல்பட்டி, குரால்நத்தம், திப்பம்பட்டி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில், ஏராளமான மலை அடிவார கிராமங்கள் உள்ளன. அங்கு முக்கிய பணப்பயிராக மரவள்ளி சாகுபடி இருந்தது. ஆண்டுதோறும் தவறாமல் மானாவாரியாகவும், நீர் பாய்ச்சியும் மரவள்ளி சாகுபடி செய்தனர். மானாவாரியாக சோளம், ராகி, தட்டை பயிர் உள்ளிட்ட தானியங்களை சாகுபடி செய்தனர். காட்டுப்பன்றிகள் படையெடுப்பால் மரவள்ளி உள்ளிட்ட உணவு பொருட்கள் சாகுபடி செய்வதை விவசாயிகள் கைவிட்டுள்ளனர்.

இதுகுறித்து தும்பல்பட்டி விவசாயிகள் கூறியதாவது: இரவில் காட்டுப்பன்றிகள் வயலில் புகுந்துவிடுகின்றன. தடுக்க முயன்றால், ஆட்களை தாக்க பாய்கின்றன. மரவள்ளி, தக்காளி, மக்காச்சோளம், நெல், சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. காட்டுப்பன்றிக்கு பயந்து மரவள்ளி சாகுபடியை மறந்து விட்டோம். நெல், கரும்பு, கம்பு, சோளம் உள்ளிட்ட தானியம், தக்காளி, சுரக்காய் உள்ளிட்ட காய்கறி, பழங்கள் சாகுபடி செய்யவே முடியவில்லை. மரவள்ளிக்கு பதில் அரளி சாகுபடி செய்கிறோம். சாப்பாட்டுக்கு உணவு பொருட்கள் வெளியே காசு கொடுத்து வாங்குகிறோம். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே அத்யாவசிய உணவு பொருட்களை சாகுபடி செய்ய முடியும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us