/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருவிழா மறுபூஜை பக்தர்கள் வழிபாடு
/
திருவிழா மறுபூஜை பக்தர்கள் வழிபாடு
ADDED : ஜூலை 25, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: சேலம், நெய்க்காரப்பட்டியில் உள்ள மூங்கில்குத்து முனியப்பன் கோவிலில் ஆடி முதல் வியாழனையொட்டி, கடந்த, 18ல் பொங்கல் திருவிழா நடந்தது.
அன்று ஏராளமானோர், முனி-யப்பன் கோவிலில் ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். அதையொட்டி எருதாட்டமும் கோலாக-லமாக நடந்தது. அதை தொடர்ந்து மறுபூஜை நேற்று நடந்தது. அதிலும் ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு வந்து ஆடு, கோழி-களை பலியிட்டு முனியப்பனை வழிபட்டனர்.