/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேங்காய் நார் மில்லில் தீ கழிவு, கோழி ெஷட் சேதம்
/
தேங்காய் நார் மில்லில் தீ கழிவு, கோழி ெஷட் சேதம்
ADDED : அக் 09, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார் அருகே திண்டமங்கலத்தை சேர்ந்தவர் மோகன்பிரபு, 45. கயிறு திரிக்கும் தேங்காய் நார் மில் வைத்துள்ளார். நேற்று மதியம், 12:00 மணிக்கு, அந்த மில்லில் பழுதான இயந்திரத்துக்கு வெல்டிங் வைக்கும் பணி நடந்தது.
அதிலிருந்து வெளியேறிய தீ, அருகில் இருந்த தேங்காய் கழிவு நாரில் பட்டு தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
இதை அறிந்து விரைந்து வந்த, ஓமலுார் தீயணைப்புத்துறையினர், 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் தேங்காய் நார் கழிவு, அருகே இருந்த கோழி ெஷட்டின் ஒரு பகுதி கருகின. அதன் மதிப்பு, 35,000 ரூபாய். தொளசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.