/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீ விபத்தில் குடிசை நாசம் ரூ.1 லட்சம் கருகின
/
தீ விபத்தில் குடிசை நாசம் ரூ.1 லட்சம் கருகின
ADDED : ஜூன் 20, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல், தலைவாசல், சிறுவாச்சூர், ஏரிக்காட்டை சேர்ந்த, விவசாயி தங்கவேல், 75. இவரது தோட்டத்தில் குடிசை வீட்டில் வசித்தார். நேற்று மாலை, 6:30 மணிக்கு, மின் கசிவால் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து, 7:00 மணிக்கு, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள் சென்று, மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.
இதில் ஒரு பெட்டியில் வைத்திருந்த, ஒரு லட்சம் ரூபாய் நோட்டுகள் எரிந்து கருகின. தவிர விவசாய நில ஆவணங்கள், பாத்திரம், துணிகளும் நாசமாகின. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.