/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மரம் கடத்துவோருக்கு வனத்துறை பாதுகாப்பு அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் மா.செ., குற்றச்சாட்டு
/
மரம் கடத்துவோருக்கு வனத்துறை பாதுகாப்பு அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் மா.செ., குற்றச்சாட்டு
மரம் கடத்துவோருக்கு வனத்துறை பாதுகாப்பு அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் மா.செ., குற்றச்சாட்டு
மரம் கடத்துவோருக்கு வனத்துறை பாதுகாப்பு அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் மா.செ., குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 22, 2025 01:12 AM
கருமந்துறை, சேலம் புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், ஏற்காடு சித்ரா தலைமை வகித்தனர்.
புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: மலைவாழ் மக்கள் செடிகளை வெட்டினால் கூட கைது நடவடிக்கை மேற்கொள்ளும் வனத்துறையினர், மரங்களை வெட்டி கடத்தும் ஆளுங்கட்சியினர், கடத்தல் கும்பல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாதுகாப்பு வழங்குகின்றனர். 8 மாதங்களுக்கு பின், கடத்தல் கும்பல், உடந்தையாக உள்ள வனத்துறையினர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திட்டங்களை நிறைவேற்றுவது, அ.தி.மு.க., ஆட்சி. அந்த திட்டங்ளுக்கு மூடுவிழா நடத்தியது தான், தி.மு.க., ஆட்சியின் சாதனை. கறவை மாடு வழங்குவது, கிணறு வெட்டுதல் போன்ற திட்டங்களில், தி.மு.க.,வினர் முறைகேடு செய்துள்ளனர். ஒரு மாதத்தில் மாம்பழ சீசன் வருவதால், கமிஷன் பெறுவதற்காக, தற்போதே முயற்சி செய்கின்றனர். 2026ல் தி.மு.க., எதிர்க்கட்சியாக கூட இருக்காத நிலை தான் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, தி.மு.க., ஆட்சியில் தொடரும் குற்றச்சம்பவங்களை பட்டியல் போட்டு துண்டு பிரசுரங்களை, மேள தாளம் முழ ங்க சென்று, மக்களிடம் வழங்கினார். ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் மணி, ராஜமுத்து, நல்லதம்பி, ஒன்றிய செயலர்கள் மோகன், முருகேசன், ஒன்றிய விவசாய அணி செயலர் பழனி
சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.