sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருடனை அடித்து கொன்ற 'மாஜி' பஞ்., தலைவர் கைது

/

திருடனை அடித்து கொன்ற 'மாஜி' பஞ்., தலைவர் கைது

திருடனை அடித்து கொன்ற 'மாஜி' பஞ்., தலைவர் கைது

திருடனை அடித்து கொன்ற 'மாஜி' பஞ்., தலைவர் கைது


ADDED : ஜூலை 23, 2025 02:25 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:திருடனை அடித்து கொன்ற முன்னாள் பஞ்சாயத்து தலைவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், கொளத்துார், பாலமலை ஊராட்சி கெம்மம்பட்டியை சேர்ந்தவர் மாதப்பன், 63. பாலமலை ஊராட்சி முன்னாள் தலைவர். இவரது மனைவி ராஜம்மாள், 60.

ஜூலை, 12 காலை, ராஜம்மாளிடம் நுாதன முறையில், அவரது கம்மலை திருடிக்கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ராஜவீதி, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராஜா, 32, அவரது சித்தப்பா மகன் அண்ணாமலை ஆகியோர் பைக்கில் தப்பினர்.

அடிவாரம் உள்ள கண்ணாமூச்சிக்கு சென்றபோது, பாலமலை கிராம மக்கள், திருடர்களை மடக்கி பிடித்தனர். அப்போது சிலர், திருடர்களை தாக்கியதாக புகார் எழுந்தது. காயமடைந்த இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜூலை, 15ல் அண்ணாமலை உயிரிழந்தார். தாக்கியவர்கள் மீது, கொளத்துார் போலீசார் கொலை வழக்கு பதிந்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் மாதப்பனை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us