/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விசாரணைக்கு ஆஜராகாத 4 பேர் சுற்றிவளைப்பு
/
விசாரணைக்கு ஆஜராகாத 4 பேர் சுற்றிவளைப்பு
ADDED : நவ 06, 2025 02:02 AM
சேலம், சேலம், கிச்சிப்பாளையம், நாராயண நகர், ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் அலாவுதீன், 52. இவர் கடந்த மாதம், 1ல் அடிதடி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்தார். இவரை கிச்சிப்பாளையம் போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், தாதகாப்பட்டி, சண்முகா நகர், மதுரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார், 20. இவர், 2024ல் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சேலம், குகையை சேர்ந்தவர் வின்சென்ட், 45. இவர், 2023ல் அடிதடி வழக்கில் கைதானார். எருமாபாளையம், தமிழ்மணி பஜனை மடம் தெருவை சேர்ந்த தயாளன், 29. இவர், 2021ல் அடிதடி வழக்கில் கைதானார். இவர்கள் அனைவரும், ஜாமினில் வந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் அவர்களை, நேற்று, அந்தந்த ஸ்டேஷன் போலீசார் கைது செய்தனர்.

