sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போட்டித்தேர்வில் பழங்குடி மாணவர்கள் சாதிக்க தி கொங்கு பாலிடெக்னிக்கில் இலவச பயிற்சி

/

போட்டித்தேர்வில் பழங்குடி மாணவர்கள் சாதிக்க தி கொங்கு பாலிடெக்னிக்கில் இலவச பயிற்சி

போட்டித்தேர்வில் பழங்குடி மாணவர்கள் சாதிக்க தி கொங்கு பாலிடெக்னிக்கில் இலவச பயிற்சி

போட்டித்தேர்வில் பழங்குடி மாணவர்கள் சாதிக்க தி கொங்கு பாலிடெக்னிக்கில் இலவச பயிற்சி


ADDED : ஜூன் 16, 2025 03:55 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லுார்:ரயில்வே, வங்கி, எஸ்.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி, ஆகிய போட்டித்தேர்வுகள் எழுத, பழங்குடி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க முயற்சி செய்து, அதன்படி, மல்லுார் தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில், 250 பேர் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். அங்கு சமீபத்தில் வந்த, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, பாலிடெக்னிக் வளாகம், விடுதியை பார்வையிட்டார்.

தொடர்ந்து, பயிற்சி பெறும் மாணவ, மாணவியர் இடையே பேசுகையில், ''தமிழக அரசு பழங்குடியின மாணவ, மாணவியர் முன்னேற்றத்துக்கு, போட்டித்தேர்வு பயிற்சிக்கு உண்டான செலவினங்கள் அனைத்தையும் ஏற்று, இலவச பயிற்சி அளிக்கிறது. இதில் பங்கேற்கும் அனைவரும், தவறாமல் வகுப்புகளில் பங்கேற்று, போட்டித்தேர்வில் வெற்றி பெற வேண்டும்,'' என்றார்.

தொடர்ந்து, பாலிடெக்னிக் தலைவர் ராமலிங்கம், முதல்வர் சரவணன், நன்கு பயிற்சி பெற அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us