sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுவன் ஓட்டிய மொபட் விபத்தில் சிக்கி நண்பன் படுகாயம்

/

சிறுவன் ஓட்டிய மொபட் விபத்தில் சிக்கி நண்பன் படுகாயம்

சிறுவன் ஓட்டிய மொபட் விபத்தில் சிக்கி நண்பன் படுகாயம்

சிறுவன் ஓட்டிய மொபட் விபத்தில் சிக்கி நண்பன் படுகாயம்


ADDED : ஏப் 21, 2025 07:19 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காடு, அத்தியூரை சேர்ந்த, சுப்ரமணி மகன் பூவரசன், 16. இவர், நேற்று மதியம், 2:00 மணிக்கு 'டியோ' மொபட்டில் அமர்ந்து, ஒண்டிக்கடை நோக்கி சென்றுகொண்டிருந்தார். இவரது நண்பரான, மற்றொரு, 16 வயது சிறுவன் ஓட்டினான்.

ஏற்காடு பஸ் ஸ்டாண்டை அடுத்து சிறிது துாரம் சென்றபோது, முன்புறம் நின்ற காரை பார்த்து, சிறுவன் பிரேக் போட்டுள்ளார். அதில் தடுமாறி விழுந்த பூவரசன், கட்டுப்பாட்டை இழந்த மொபட்டுடன், 50 அடி துாரம் இழுத்துச்செல்லப்பட்டார். ஓட்டிய சிறுவனுக்கு காது, கைகளில் காயம் ஏற்பட்டது.பூவரசனுக்கு தலை, கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. ஏற்காடு போலீசார், சிறுவர்களை மீட்டு, ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.

பூவரசனுக்கு படுகாயம் ஏற்பட்டிருந்ததால், மேல் சிகிச்சைக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போக்குவரத்து போலீசார், சிறுவர்கள், வாகனம் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us