/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தலைமறைவானவர் 9 ஆண்டுக்கு பின் கைது
/
தலைமறைவானவர் 9 ஆண்டுக்கு பின் கைது
ADDED : ஆக 05, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் லைன்மேடு, வேலு புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன், 40. கடந்த 2016ல் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த அவர், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து, செவ்வாய்பேட்டை போலீசார் கடந்த 9 ஆண்டுகளாக மகேந்திரனை தேடிவந்த நிலையில், வீட்டில் பதுங்கி இருந்த அவரை நேற்று கைது செய்தனர்.