/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் பர்னிச்சர் கடைக்காரர் பலி
/
விபத்தில் பர்னிச்சர் கடைக்காரர் பலி
ADDED : ஏப் 27, 2025 04:58 AM
வாழப்பாடி: ஆத்துார், புதுப்பேட்டையை சேர்ந்த, பர்னிச்சர் கடை உரிமை-யாளர் சையது முஸ்தபா, 53. இவரது மனைவி காத்தி முன்னிஷா, 44. இவர்கள் நேற்று, ஆத்துாரில் இருந்து சேலம் நோக்கி, 'அக்சஸ்' மொபட்டில் வந்து கொண்டிருந்தனர்.
சையது முஸ்தபா ஹெல்மெட் அணியாமல் ஓட்டினார். மதியம் 3:30 மணிக்கு, வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி, பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகே வந்தபோது, மொபட் டயர் பழுதாகி கட்டுப்பாட்டை இழந்ததில் நிலை தடுமாறி இருவரும் விழுந்-தனர். படுகாயம் அடைந்த சையது முஸ்தபா, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். காத்தி முன்-னிஷா, வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு-மதிக்கப்பட்டார். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.