ADDED : ஜூன் 03, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் டவுன் எஸ்.ஐ. மஞ்சுளா தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆனந்தா பாலம் அருகே ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது,
போலீசார் வருவதையறிந்த அந்த நபர், கையில் வைத்திருந்த பையை கீழே போட்டு விட்டு தப்பினார். பையை சோதனை செய்த போது அதில், 900 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.