நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, வாழப்பாடி அடுத்த பேளூர் சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை நடந்தது. சேலம், நாமக்கல், தர்மபுரி, வெள்ளிமலை, கருமந்துறை, கள்ளக்குறிச்சி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு துவங்கிய வாரச்சந்தைக்கு, பல்வேறு பகுதியிலிருந்து, 650 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு, 4,300 முதல் 6,200 ரூபாய் வரை விலை போனது. அதேபோல், 10 கிலோ எடை கொண்ட ஒரு பெண் ஆடு 3,000 முதல், 4,200 ரூபாய் வரை விலை போனது.
இரு வாரமாக தொடர் மழை காரணமாக, ஆடுகள் வரத்து குறைந்ததோடு, விற்பனையும் மந்தமாக நடந்தது. நேற்று நடந்த சந்தையில், 14 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.