/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாட்டியை கொன்ற பேரன் குண்டர் சட்டத்தில் கைது
/
பாட்டியை கொன்ற பேரன் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஜூலை 29, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், தாரமங்கலம் அருகே, தெசவிளக்கு ஊராட்சி சின்னப்பிள்ளையூரை சேர்ந்தவர் பிரகாஷ், 31.
கடந்த ஜூன், 20ல் இவரது பாட்டி சின்னப்பிள்ளை, 74 என்பவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதாகி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் பரிந்துரைந்தார். அதன்படி, பிரகாஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார். அதற்கான நகல் பிரகாஷிடம் நேற்று வழங்கப்பட்டது.