/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பசுமை ஏற்காடு திட்ட விழிப்புணர்வு பேரணி
/
பசுமை ஏற்காடு திட்ட விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 26, 2025 03:46 AM
ஏற்காடு: சுற்றுலா தினத்தையொட்டி, ஏற்காட்டில், 'பசுமை ஏற்காடு' திட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். ஒன்றிய அலுவல-கத்தில் தொடங்கிய பேரணி, ஒண்டிக்கடை ரவுண்டானாவில் நிறைவடைந்தது. இதில் பள்ளி குழந்தைகள், திட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச்சென்றனர். மேலும் சுற்றுலா பயணியர், மக்களுக்கு, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், இலவ-சமாக மஞ்சப்பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அண்ணா பூங்கா சாலை ஓரம் பிளாஸ்டிக் குப்-பையை அகற்றி மரக்கன்றுகள் நட்டனர்.
பின் ஒண்டிக்கடையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலை-யத்தில் வைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தை ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையம் சரியாக இயங்குவதில்லை என மக்கள் கூற, அதிகாரிக-ளிடம் கலெக்டர் கேட்டார். அப்போது காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை இயங்குவதாக கூறினர். காலை, 6:00 முதல் இரவு, 10:00 மணி வரை இயங்க நடவடிக்கை எடுக்க-வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.

