/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேற்கு அஞ்சல் கோட்டத்தில் வரும் 27ல் குறைதீர் கூட்டம்
/
மேற்கு அஞ்சல் கோட்டத்தில் வரும் 27ல் குறைதீர் கூட்டம்
மேற்கு அஞ்சல் கோட்டத்தில் வரும் 27ல் குறைதீர் கூட்டம்
மேற்கு அஞ்சல் கோட்டத்தில் வரும் 27ல் குறைதீர் கூட்டம்
ADDED : மார் 18, 2024 04:02 AM
சேலம்: சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்திபன் அறிக்கை:
சூரமங்கலம் மேற்கு கோட்ட அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் வரும், 27 காலை, 11:00 மணிக்கு நடக்க உள்ளது. அதில் வாடிக்கையாளர், புகார்களை, 'கண்காணிப்பாளர், மேற்கு அஞ்சல் கோட்டம், சேலம்' என்ற முகவரிக்கு, வரும், 20க்குள் அனுப்ப வேண்டும். மணியார்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு செய்யப்பட்ட தபால் போன்ற சேவை தொடர்பான புகார்கள் இருப்பின் அதன் பதிவு எண், பதிவு செய்யப்பட்ட தேதி, அதன் அலுவலகம் போன்ற விபரங்களை குறிப்பிட வேண்டும்.
சேமிப்பு வங்கி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவை தொடர்பான புகார்கள் இருப்பின் அதுதொடர்பான முழு கணக்கு எண், பாலிசி எண், வைப்பாளர் அல்லது காப்பீட்டாளர் பெயர், முகவரி, தபால் அலுவலக பெயர் போன்ற விபரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். இத்தகைய புகார் அனுப்பும் அஞ்சல் உறை மீது, 'டாக் அதாலத் வழக்கு' என குறிப்பிட வேண்டும்.

