/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் உள்பட 5 மாவட்டங்களில் இன்று பி.எப்., குறைதீர் கூட்டம்
/
சேலம் உள்பட 5 மாவட்டங்களில் இன்று பி.எப்., குறைதீர் கூட்டம்
சேலம் உள்பட 5 மாவட்டங்களில் இன்று பி.எப்., குறைதீர் கூட்டம்
சேலம் உள்பட 5 மாவட்டங்களில் இன்று பி.எப்., குறைதீர் கூட்டம்
ADDED : அக் 28, 2024 04:45 AM
சேலம்: சேலம் உள்பட, 5 மாவட்டங்களில் இன்று, பி.எப்., குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
இதுகுறித்து மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் சந்-தீப்சிங் நேகி அறிக்கை:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீடு கழகம் சார்பில், மாவட்டம் வாரியாக ஒருங்கி-ணைந்த மக்கள் குறைதீர் கூட்டம் அக்., 28ல்(இன்று) நடக்க உள்-ளது. காலை, 9:00 முதல், 1:00 மணி வரை, மதியம், 2:00 முதல், மாலை, 5:45 மணி வரை என, இரு கட்டமாக நடக்கி-றது.
அதன்படி சேலத்தில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே அத்வைதா ஆசிரம சாலையில் உள்ள விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நி-லைப்பள்ளி; ஈரோட்டில் சத்தியமங்கலம் ஆலத்துக்கோம்பையில் உள்ள பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடக்கும்.அதேபோல் தர்மபுரியில் பொம்மிடி, மல்லபுரத்தில் உள்ள அன்னை இந்தியா மெட்ரிக்குலேஷன் பள்ளி; நாமக்கல்லில் சேலம் பிரதான சாலையில் உள்ள சானு இன்டர்நேஷனல் ஓட்டல்; கிருஷ்ணகிரியில் போஸ்கோ கார்டன்ஸ், டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கூட்டம் நடக்க உள்-ளது.
இதில் உறுப்பினர் குறைகளை நிவர்த்தி செய்யும்படியும், இ.பி.எப்., அட்வான்ஸ் குறித்த விழிப்புணர்வும் இருக்கும். வருங்கால வைப்பு நிதி நிறுவன வரம்புக்குட்பட்ட பணியா-ளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள், குறைகளை நிவர்த்தி செய்ய பங்கேற்கலாம்.

