/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அஞ்சல் வாடிக்கையாளருக்கு 27ல் குறைதீர் கூட்டம்
/
அஞ்சல் வாடிக்கையாளருக்கு 27ல் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 18, 2024 01:59 AM
சேலம், டிச. 18-
சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்திபன் அறிக்கை:
கோட்ட அளவில் அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம், வரும், 27 மதியம், 2:30 மணிக்கு, கோட்ட அலுவலகத்தில் நடக்க உள்ளது. வாடிக்கையாளர்கள் புகாரை, 'அஞ்சல் கண்காணிப்பாளர், மேற்கு கோட்டம், சேலம் - 636 005' என்ற முகவரிக்கு, வரும், 25க்குள் அனுப்ப வேண்டும்.
மணியார்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு செய்யப்பட்ட தபால் போன்ற சேவை தொடர்பான புகார்கள் இருப்பின், அதுதொடர்பான பதிவு எண், பதிவு தேதி, அதன் அலுவலகம் போன்ற விபரங்களை குறிப்பிட வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவை தொடர்பான புகார்கள் இருப்பின் அது தொடர்பான முழு கணக்கு எண், காப்பீடு பாலிசி எண்கள், வைப்பாளர், காப்பீட்டாளர் பெயர் முகவரி, தபால் அலுவலக பெயர் குறிப்புகள் அவசியம் தேவை. முழு விபரம் அடங்கிய புகாரை அனுப்பும் அஞ்சல் உறை மீது, 'டாக் அதாலத் கேஸ்' என, குறிப்பிட வேண்டும்.