ADDED : அக் 01, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், கோவையை சேர்ந்தவர் மோகன்ராஜ், 32. இவரை, சில நாட்களுக்கு முன் வழிப்பறி வழக்கில், சேலம், செவ்வாய்ப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிந்தது. இதனால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.