/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வழிப்பறி செய்தவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
/
வழிப்பறி செய்தவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : ஆக 27, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரை கடந்த ஜூலை, 10ல், மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 3,000 ரூபாயை பறித்துச்சென்றது. இதில் கிச்சிப்பாளையம், புது சுண்ணாம்பு சூளையை சேர்ந்த பரத்ராஜ், 20, அவரது கூட்டாளிகள் கதிர்வேல், மோகன்ராஜ், ஹரிஹரன், அஜய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் தலைமறைவாக இருந்த பரத்ராஜ், ஜூலை, 27ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி, அடிதடி வழக்கு
கள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதனால் அவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.