ADDED : டிச 22, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி, டிச. 22-
சங்ககிரி, வி.என்.பாளையம் வஸந்த வல்லபராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள தபால் ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா நாளை முதல் நடக்க உள்ளது. நாளை மாலை, 4:00 மணிக்கு பூர்ணாபிஷேகத்துடன் விழா தொடங்க உள்ளது. நாளை மறுநாள் வெண்ணெய் காப்பு அலங்காரம், 25ல் சந்தனகாப்பு, 26ல் வெற்றிலை காப்பு, 27ல் பழக்காப்பு, 28ல் வெட்டிவேர் காப்பு, 29ல் செந்துார காப்பு, 30ல் ராஜாங்க சேவை, 31ல் வடைமாலை சாத்தல் நடக்க உள்ளது. மேலும் சுவாமிக்கு தினமும் மாலை, 6:30 மணிக்கு பூஜை தொடங்கி இரவு, 7:30 மணி வரை நடக்கும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஓட்டல்காரர் வீட்டில்