/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எச்.ஐ.வி., விழிப்புணர்வு: ஆட்டோவில் பேரணி
/
எச்.ஐ.வி., விழிப்புணர்வு: ஆட்டோவில் பேரணி
ADDED : ஏப் 17, 2025 01:38 AM
ஏற்காடு:ஏற்காட்டில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், சேலம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலகு, ஏற்காடு அரசு மருத்துவமனை, நம்பிக்கை மையம் ஆகியவை இணைந்து, எச்.ஐ.வி., - எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆட்டோ பேரணியை நேற்று நடத்தின.
ஏற்காடு அரசு மருத்துவமனை மருத்துவர் கவிபூர்ணிமா, கண்காணிப்பாளர் சகிலா தொடங்கி வைத்தனர்.ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய பேரணி, ஒண்டிக்கடை ரவுண்டானாவில் நிறைவடைந்தது. அதில், எச்.ஐ.வி., - எய்ட்ஸ் தடுப்பு, பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி இணை பேராசிரியர் மாலதி, ஏற்காடு நம்பிக்கை மைய ஆலோசகர் வித்யா உள்பட பலர் பங்கேற்றனர்.
பேரணியில், ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வரும் கோவை தோட்டக்கலை கல்லுாரி மாணவர்கள், சுற்றுப்புறச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் ஒண்டிக்கடை ரவுண்டானாவில் எச்.ஐ.வி., பரிசோதனை முகாம் நடந்தது.

