/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடு புகுந்து மிரட்டி நகைகள் கொள்ளை
/
வீடு புகுந்து மிரட்டி நகைகள் கொள்ளை
ADDED : நவ 14, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,சேலம், மாசிநாயக்கன்பட்டி, மதுரா கார்டனை சேர்ந்தவர் சந்திரசேகரன், 63. இவர், மனைவி, மாமியாருடன் தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அனைவரும் துாங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு, 1:30 மணிக்கு, 'குல்லா' அணிந்த, 3 பேர், வீட்டுக்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி, வீட்டில் இருந்த அரை பவுன் தோடு, ஒரு பவுன் தாலி மற்றும் குண்டு, இரு மொபைல் போன்களை, பிடுங்கிச்சென்றனர். அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

