ADDED : செப் 19, 2024 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் அருகே கல்லாநத்தத்தை சேர்ந்தவர் அன்பரசன், 55. கூலித்தொழிலாளியான இவர், அதே ஊரில் குடிசை வீட்டில் வசிக்கிறார்.
இவர் நேற்று வேலைக்கு சென்ற நிலையில், காலை, 10:20 மணிக்கு வீட்டில் இருந்து புகை வந்தது. உடனே மக்கள், ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு, தகவல் அளித்தனர். 10:35 மணிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். இதில் குடிசையின் மேற்கூரை முழுதும் நாசமானது. ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

