ADDED : ஆக 10, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, இடைப்பாடி, இருப்பாளி, மூலக்கடையை சேர்ந்தவர் வெங்கடாசலம், 57. இவரது மனைவி சகுந்தலா, 55. இவர்களது மகன் ஐயப்பன், 26. தந்தை, மகன், அதே பகுதியில் கடை வைத்து சவரத்தொழில் செய்கின்றனர்.
இவர்கள் தினமும், 'மது' அருந்திவிட்டு, சகுந்தலாவை அடித்து வந்தனர். ஒரு வாரமாக, இவர்களது தொல்லை அதிகரித்தது. இதில் படுகாயம் அடைந்த சகுந்தலா, நேற்று பூலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து, வெங்கடாசலம்,ஐயப்பனை கைது செய்தனர்.