/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியுடன் கணவரும் விஷம் குடித்து தற்கொலை
/
உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியுடன் கணவரும் விஷம் குடித்து தற்கொலை
உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியுடன் கணவரும் விஷம் குடித்து தற்கொலை
உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியுடன் கணவரும் விஷம் குடித்து தற்கொலை
ADDED : டிச 21, 2024 01:25 AM
கெங்கவல்லி, டிச. 21-
உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவியுடன், கணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி ஊராட்சி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சுந்தரராஜன், 70. இவரது மனைவி பொன்னம்மாள், 65. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகன்கள், மகள் தனித்தனியே சென்றதால், மூத்த தம்பதி, கெங்கவல்லியில் உள்ள மூத்த மகன் வீட்டில், தனியே வசித்தனர்.
பொன்னம்மாளுக்கு, 10 ஆண்டாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன், மூல நோயால் அவதிப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் பொன்னம்மாள், கணவர் சுந்தரராஜனிடம், தற்கொலை செய்வதாக கூறியுள்ளார். அதற்கு கணவரும், தற்கொலை செய்வதாக தெரிவித்துள்ளார்.
பின் தம்பதி, தோட்டத்துக்கு சென்று களைக்கொல்லி மருந்தை எடுத்து வந்து வீட்டில் குடித்து மயங்கி விழுந்தனர். நீண்ட நேரமாக வீடு திறக்கப்
படாததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர், வீட்டில் சென்று பார்த்தபோது தம்பதி மயங்கி கிடந்தது தெரிந்தது. உடனே ஆம்புலன்சில், கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். மேல்
சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்மாள் உயிரிழந்தார். நேற்று, சுந்தரராஜனும் உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

