sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'மதகில் சேதம் இருந்தால் சீரமைக்க வேண்டும்'

/

'மதகில் சேதம் இருந்தால் சீரமைக்க வேண்டும்'

'மதகில் சேதம் இருந்தால் சீரமைக்க வேண்டும்'

'மதகில் சேதம் இருந்தால் சீரமைக்க வேண்டும்'


ADDED : ஆக 12, 2024 06:29 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டம், சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

அதற்கு தலைமை வகித்து கமிஷனர் ரஞ்ஜீத் சிங் பேசியதாவது:மழையால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காதபடி மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை உடனே அகற்ற வேண்டும். ஏரிகளில் உள்ள மதகுகளில் சேதம் உள்ளிட்டவை ஏதும் இருந்தால், உடனே சீரமைக்க வேண்டும். குமரகிரி ஏரி நீர் அளவை கண்காணிக்க வேண்டும். முழு கொள்ளவை எட்டும்படி இருந்தால் உபரிநீரை திறந்து வெள்ளப்பெருக்கு ஏற்படாதபடி கண்காணிக்க வேண்டும். தெரு, சாலைகளில் உள்ள மின்கம்பங்கள், மரங்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் மூட்டை, தளவாட சாமான்கள், தண்ணீர் இறைக்கும், உறிஞ்சும் மோட்டார்கள், சுகாதார மையங்களில் தேவையான மருந்து, மாத்திரைகள், டிராக்டர், பொக்லைன் போன்ற இயந்திரங்கள் தயாராக இருக்க வேண்டும். குடிநீர், மின் வினியோகம் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். துணை கமிஷனர்கள் பூங்கொடி, பாலசுப்ரமணியம், மாநகர நல அலுவலர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us