ADDED : ஜூலை 02, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி : இடைப்பாடி வட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக இருந்த வாசுகி, நேற்று சங்ககிரி தாசில்தாராக பதவியேற்றுக் கொண்டார்.
புதிதாக பொறுப்பேற்ற தாசில்தாருக்கு துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சங்ககிரி தாசில்தாராக பணிபுரிந்து வந்த அறிவுடைநம்பி, தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டம் அலகு-2 சேலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.