/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறப்பு ரயிலில் முன்பதிவு அதிகரிப்பு; கூடுதல் பெட்டிகள் இணைப்பு
/
சிறப்பு ரயிலில் முன்பதிவு அதிகரிப்பு; கூடுதல் பெட்டிகள் இணைப்பு
சிறப்பு ரயிலில் முன்பதிவு அதிகரிப்பு; கூடுதல் பெட்டிகள் இணைப்பு
சிறப்பு ரயிலில் முன்பதிவு அதிகரிப்பு; கூடுதல் பெட்டிகள் இணைப்பு
ADDED : பிப் 14, 2025 07:07 AM
சேலம் : காசி தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கு, கோவை - பனாரஸ் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த ரயில், 16 காலை, 6:35க்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே செவ்வாய் காலை, 7:15 க்கு பனார ைஸ அடையும். மறுமார்க்க ரயில், 22 அதிகாலை, 2:00 மணிக்கு கிளம்பி, திங்கள் காலை, 9:30க்கு கோவையை அடையும்.
இந்த ரயிலில், 3ம் வகுப்பு ஏசி பெட்டி - 9, ஸ்லீப்பர் பெட்டி - 7, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி - 1 என அறிவிக்கப்பட்டிருந்தது. டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வருவதால், தற்போது, 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டிகள் - 3, ஸ்லீப்பர் பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

