/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாழடைந்த கட்டடத்தை இடிக்க வலியுறுத்தல்
/
பாழடைந்த கட்டடத்தை இடிக்க வலியுறுத்தல்
ADDED : நவ 30, 2024 02:43 AM
சேலம் மாவட்டம் வேடுகத்தாம்பட்-டியில், வேளாண் துறை சார்பில் கட்டப்பட்ட அலுவலர் குடியி-ருப்பு, 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் பூட்-டியே கிடக்கிறது. பழமையான கட்டடம் பராமரிப்பின்றி ஆங்-காங்கே விரிசல் ஏற்பட்டு, சுவர்கள், தரைகள் பெயர்ந்து எப்-போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. மேலும் புதர்மண்டி விஷ ஜந்துக்களின்
வசிப்பிடமாக மாறியுள்ளது.
அந்த பாழடைந்த கட்டடத்தை சுற்றி, குடியிருப்புகள், வேடுகத்-தாம்பட்டி ஊராட்சி அலுவலகம், அரசு கால்நடை மருத்துவ-மனை உள்ளன. மழைக்காலம் தொடங்கியுள்ளதால், பாழடைந்த கட்டடம் இடிந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அந்த கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புது கட்-டடம் கட்டி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

