/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதிய தலைமுறை சேனலை அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்ப வலியுறுத்தல்
/
புதிய தலைமுறை சேனலை அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்ப வலியுறுத்தல்
புதிய தலைமுறை சேனலை அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்ப வலியுறுத்தல்
புதிய தலைமுறை சேனலை அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்ப வலியுறுத்தல்
ADDED : அக் 16, 2025 01:59 AM
சேலம், தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் மாநில நிர்வாகிகள் கூட்டம் சேலம் ஏற்காட்டில் நடந்தது. ஏற்காடு, லைன்ஸ் கிளப்பில், இரண்டு நாள் நடந்த கூட்டத்தில் நிர்வாகம் சார்பில் பத்து லட்சம் செட்டாப் பாக்ஸ் தமிழகம் முழுவதும் விநியோகிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2026 சட்டசபை தேர்தலில் கேபிள் ஆப்ரேட்டர்கள் அனைவரும், தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு தேர்தல் பணியாற்றுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், தலைவர் வெள்ளைச்சாமி பொது செயலர் நாகர்கோவில் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாகிகள் உள்பட, 1,000 உறுப்பினர் பங்கேற்றனர்.
இந்த பொது குழு கூட்டத்தில் புதிய தலைமுறை சேனல், அரசு கேபிளில் நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து அந்த சேனல் உடனடியாக ஒளிபரப்ப வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.