sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலி மணல் தயாரித்து விற்பனை தொட்டியை இடித்து விசாரணை

/

போலி மணல் தயாரித்து விற்பனை தொட்டியை இடித்து விசாரணை

போலி மணல் தயாரித்து விற்பனை தொட்டியை இடித்து விசாரணை

போலி மணல் தயாரித்து விற்பனை தொட்டியை இடித்து விசாரணை


ADDED : அக் 05, 2025 01:14 AM

Google News

ADDED : அக் 05, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி, சங்ககிரி, செட்டிப்பட்டியில் போலி மணல் தயாரிப்பதாக, வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் துணை தாசில்தார் சண்முகம் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், தேவூர் போலீசார், அப்பகுதியில் விசாரித்தனர். அப்போது, பொன்னுசமுத்திரம் ஏரி பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் மண் எடுத்து, அந்த மண்ணை தண்ணீர் தொட்டியில் கொட்டி, போலியாக மணல் தயாரித்ததை கண்டுபிடித்தனர். 15 யுனிட் மண் குவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், 'மண்ணை தண்ணீரில் கொட்டி அதிலிருந்து மணல் எடுத்துள்ளனர். மண்ணை தண்ணீரில் கழுவும்போது அதிலிருந்த சிறு மண் துகள்களை, மணல் எனக்கூறி விற்று வந்ததும் தெரிந்தது. இதனால் மண்ணை மணலாக மாற்ற பயன்படுத்தப்பட்ட தொட்டியை இடித்துள்ளோம். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.






      Dinamalar
      Follow us