ADDED : ஏப் 23, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, சேலம் கோட்டை ஸ்டேட் வங்கி முன்பிருந்து, தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி நேற்று பேரணி சென்றனர். முன்னதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் பிரபாகரன் தொடங்கி வைத்தார். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளானோர் சென்று, கோட்டை மைதானத்தில் நிறைவு செய்தனர்.
முன்னதாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல்; காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

