sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நகை, வெள்ளி பொருட்களும் காணவில்லை பணம் திருடுபோன விவகாரத்தில் மீண்டும் புகார்

/

நகை, வெள்ளி பொருட்களும் காணவில்லை பணம் திருடுபோன விவகாரத்தில் மீண்டும் புகார்

நகை, வெள்ளி பொருட்களும் காணவில்லை பணம் திருடுபோன விவகாரத்தில் மீண்டும் புகார்

நகை, வெள்ளி பொருட்களும் காணவில்லை பணம் திருடுபோன விவகாரத்தில் மீண்டும் புகார்


ADDED : ஜூலை 11, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் :சேலம், கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் தனபால், 49. முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு கடந்த, 6ல் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி ஜெயந்தி, 45, தனபாலை அழைத்துக்கொண்டு, வீட்டை பூட்டி விட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். 7 காலை திரும்பி வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த, 5,000 திருடுபோனது தெரிந்தது.

அதேபோல் தனபால் வீட்டின் மாடியில் வசிக்கும், பெரியார் பல்கலை கவுரவ விரிவுரையாளர் ரகுநாத், 32, கோவை சென்றிருந்த நிலையில், அவரது வீட்டிலும், 5,000 ரூபாய் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அன்றே தனபால் புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயந்தி, மீண்டும் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சம்பவ நாளில் பணம் மட்டும் திருடுபோனதாக தெரிவித்தனர். தற்போது நகைகள் காணவில்லை என தெரியவந்ததால், ஜெயந்தி புகார் அளித்தார். அதில், 3 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், 10,000 திருடுபோனதாக தெரிவித்துள்ளார். அதன்படி விசாரணை நடக்கிறது' என்றனர்.






      Dinamalar
      Follow us