sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மொபட்டில் அமர்ந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

/

மொபட்டில் அமர்ந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

மொபட்டில் அமர்ந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

மொபட்டில் அமர்ந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு


ADDED : ஏப் 14, 2025 06:36 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: ஆத்துார் அடுத்த மல்லியக்கரை அருகே சீலியம்பட்டியை சேர்ந்த, குமரேசன் மனைவி மணிமேகலை, 40. இவரது மகள் கோபிகா, 20. இருவரும் நேற்று இரவு, 7:30 மணிக்கு மல்லியக்கரையில் இருந்து அயோத்தியாப்பட்டணம் நோக்கி உறவினர் வீட்டுக்கு, 'மேஸ்ட்ரோ' மொபட்டில் சென்றுகொண்டிருந்தனர். மணிமேகலை ஹெல்மெட் அணிந்து ஓட்டினார்.

வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, அவர்களுக்கு பின்னால் பைக்கில் வந்த இருவர், மொபட்டில் அமர்ந்து சென்ற கோபிகா அணிந்திருந்த, 1.7 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அதில் நிலைதடுமாறி மணிமேகலை, கோபிகா விழுந்து காயம் அடைந்தனர். நகையை பறித்த இருவரும் தப்பிவிட்டனர். காயம் அடைந்த தாய், மகளை, மக்கள் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us