ADDED : ஆக 22, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆட்டையாம்பட்டி, ஆட்டையாம்பட்டியில் உள்ள நகை கடையில், சிறிது சிறிதாக நகைகள் திருடுபோனது தெரிய வந்தது. அதன் உரிமையாளர் திலகவதி, ஆட்டையாம்பட்டி போலீசில், கடந்த ஜூன், 18ல் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்து வந்த நிலையில், ஆட்டையாம்பட்டி பாவடி மைதானத்தில் நேற்று, நகைக்கடை ஊழியரான, ஆட்டையாம்பட்டியை சேர்ந்த சுரேஷ், 23, என்பவரை கைது செய்து, 12 கிராம் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய, 4 பேரை, போலீசார் தேடுகின்றனர்.