ADDED : டிச 24, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் புறநகர் மாவட்ட, த.மா.கா., சார்பில் உடையாப்பட்டி கக்-கன்காலனியில் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. புறநகர் மாவட்ட தலைவர் வக்கீல் செல்வம், அலங்கரிக்கப்பட்ட கக்கன் உருவபடத்துக்கு மாலை அணிவித்து, மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன், மாவட்ட எஸ்.சி-எஸ்.டி, பிரிவு துணைத்தலைவர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.